அமைச்சர் பி.மூர்த்தி விடுதலை சந்தா தொகை ரூ.1,00,000 வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

அமைச்சர் பி.மூர்த்தி விடுதலை சந்தா தொகை ரூ.1,00,000 வழங்கினார்

27-10-2022 வியாழன் அன்று  கழக தொழிலாளரணிமாநிலசெயலாளர் மு.சேகர், மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மாநில வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன், மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர் வழக் குரைஞர் நா.கணேசன், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் மண்டல தலைவர் கா.சிவகுருநாதன், மண்டல செயலாளர் நா.முருகேசன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் ச.பால்ராஜ், மாவட்ட துணை செயலாளர், இரா.லீ. சுரேஷ், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் பா.முத்துக்கருப்பன், திருச்சி சே.மாத்தையா, முபாரக், க.பிச்சைப்பாண்டி, போட்டோ இராதா, ஓட்டுநர் தியாகராஜன் ஆகியோர் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்  பி.மூர்த்தியை   சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 பிறந்தநாள் மற்றும் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கப்பணி குறித்த செய்திகளை எடுத்துக் கூறியதைக் கேட்ட அமைச்சர் மூர்த்தி தமிழர் தலைவர் அவர்களின் தொண் டினைப் பாராட்டி விடுதலை சந்தாவிற்கு ஒரு இலட்சம் வழங்கினார்.


No comments:

Post a Comment