தொழிலாளர் தோழர்களுக்கு வணக்கம், அறிவுலக பேராசான், மானுட மீட்பர் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாள் விழாவினை நாடெங்கிலும் எழுச்சியோடு கொண்டாட தோழர்கள் மிகுந்த உற்சாகத்தோடு இருந்து வருகிறீர்கள். திராவிடர் தொழிற்சங்கத் தோழர்கள் திசையெங்கும் நம் இனத்தின் தலைவரின் பிறந்த நாளை எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாட வேண்டுகிறேன். பட்டித்தொட்டி எங்கினும் நமது இலட்சியக் கொடி பறப்பது போல், நமது தொழிற்சங்கங்கள் இருக்கும் அனைத்து பகுதிகளிலும், போக்குவரத்துத்துறை அலுவலகங்களிலும் பட்டொளி பறந்து வீசட்டும். பாசிச சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, நமது கொள்கை பேராயுதத்தினை முன்னெடுத்து மதவாதக் கூட்டங்கள் நம்மை நெருங்க விடாமல் நெருப்பாய் இருப்போம், பொறுப்பாய் நமது கடமைகளை நிறைவேற்றுவோம்.
ஆம்! நாம் அனைவரும் 60 ஆயிரம் விடுதலை சந்தாவை நோக்கி வீறுநடை போட்டுக் கொண்டு வருகிறோம். நமது இலக்கு வெற்றியடைய வெகுதூரம் இல்லை. உழைப்போம், வெற்றிக்காண்போம். திராவிட மாடல் ஆட்சிக்கு துணையாய் நின்று எழுச்சியாய் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காட்டும் திசைநோக்கி வெற்றிக் காண்போம். மதவெறி கூட்டத்தை மடிய செய்வோம். தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழாவினை சமூகநீதி நாளாக உறுதியேற்போம்.
மு.சேகர்,
மாநிலத் தொழிலாளரணி செயலாளர்,
திருச்சி
No comments:
Post a Comment