தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கைக்கு வெற்றி பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கைக்கு வெற்றி பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சேர்ப்பு

புதுடில்லி,செப்.15- பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூ கத்தினரை சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக ஒன்றிய  அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் குருவிக் காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இது தொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யிருந்தார். அதில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங் களையும் தெரிவித்திருந்தார்.

பிரதமருக்கு அவர் எழுதி யிருந்த கடிதத்தில், ‘நரிக்குற வர்கள் சமூகம், மிகவும் பின் தங்கிய மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்று. பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாது காப்பு மற்றும் நலத்திட்டங் களை பெற தகுதியுடையவர் களாவர். இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உட னடியாக தலையிட்டு நரிக் குறவர், குருவிக்காரர் சமூகத் தினரை பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்நிலையில், டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட் டுள்ளது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறியதாவது:

தமிழ்நாடு, கருநாடகா, சத் தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங் குடியினர் பட்டியலில் விடு பட்டிருந்த சமுதாயத்தினரை சேர்க்க அனுமதி வழங்கி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து பழங்குடியினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி நரிக்குறவர், குருவிக்காரர், ஹட்டி, பிரிஜியா சமூகத்தின ருக்கும் கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

பழங்குடியினர் பட்டிய லில் சேர்ப்பதன் மூலம் ஹட்டி சமூகத்தைச் சேர்ந்த 1.60 லட்சம் மக்கள் பயனடைவர். ஹட்டி இனமக்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் உள்ளனர். அதே போல, சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிக அளவில் உள்ள பிரிஜியா இனத்தவரும் பயன டைவர். தமிழ்நாட்டில் நரிக் குறவர், குருவிக்காரர் சமூகத் தவர்களும் இதன்மூலம் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

நலத் திட்டங்கள்

பழங்குடியினர் பட்டிய லில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை சேர்ப்பதற்கான மசோதா சட்டமாக இயற் றப்படும். அதன்பிறகு, தமிழ் நாட்டின் திருத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், ஒன்றிய அரசின் தற்போதைய நலத் திட்டங்களின் பயன் களை பெற முடியும்.

மெட்ரிக் படிப்புக்கு பிந் தைய கல்வி உதவித்தொகை, வெளிநாடுகளில் படிப் பதற்கான தேசிய கல்வி உதவித்தொகை, தேசிய ஆய்வு உதவித்தொகை, உயர்தரக் கல்வி, தேசிய அட்டவணை பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்திடம் இருந்து சலுகை கடன்கள், அட்டவணை பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான விடுதிகள் போன்ற திட்டங்கள் மூலம் இந்த இனத்தவர் பயன்பெற முடியும். மேலும், ஒன்றிய அரசு கொள்கையின்படி, அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பயன் களையும் இவர்கள் பெற முடியும்.

No comments:

Post a Comment