பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் சேதம் : பின்னணி என்ன? காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் சேதம் : பின்னணி என்ன? காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு

சென்னை,செப்.28- எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதன் எதிரொலி யாக சென்னை முழுவதும் உள்ள பெரியார், அண்ணா உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலை களுக்கும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. என்அய்ஏ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் கடந்த 22ஆம் தேதிதமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஅய் அமைப்பு மற்றும்அதன் நிர்வாகிகள், அவர்கள் தொடர்புடைய 93 இடங்களில்அதிரடி சோதனை நடத்தி பலர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக் குடி, கன்னியாகுமரி என வெவ்வேறு பகுதிகளில் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைக் குறிவைத்து அடுத்தடுத்து பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாகத் தமிழ்நாடு முழுவதும் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதுமட்டும் அல்லாமல் விழுப்புரம் அருகே கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள அண் ணாவின் முழுஉருவச் சிலை அண்மையில் அவமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை தேனாம் பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையின் மூக்கு பகுதி சேதப்படுத்தப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் தேனாம் பேட்டை நிகழ்வு இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை முழுவதும் உள்ள சுமார் 60 பெரியார், அண்ணா சிலைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளுக்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். 

இதையடுத்து அண்ணா சாலையில் உள்ள பெரியார், அண்ணா சிலைகள் உட்பட அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment