திரிபுராவில் பொதுமக்கள் நடத்திய ‘விநாயகர் சதுர்த்தி'யில் பா.ஜ.க.வினர் அட்டூழியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

திரிபுராவில் பொதுமக்கள் நடத்திய ‘விநாயகர் சதுர்த்தி'யில் பா.ஜ.க.வினர் அட்டூழியம்

அகர்தலா, செப்.4 விநாயகரை காக்க வந்தவர்கள் போல் தங்களைக் காட்டிக் கொள்ளும் பாஜக கூட்டம் விநாயகரை ஊருக்கு ஏற்றாற் போல், மாநிலத்திற்கு ஏற்றாற் போல் பயன்படுத்திக்  கொள் கிறது. 

திரிபுராவில் ‘விநாயகர் சதுர்த்தி' கொண்டாடியவர்களை பா.ஜ.க. தலை வர்கள் தலைமையில் வந்த  கும்பல் கொடூரமாகத் தாக்கிவிட்டு, விழா பந்தலை சூறையாடி விட்டு தப்பியோடி யுள்ளது.  

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ளது பதி அபோய்நகர் பகுதி. இங்கு ‘விநாயகர் சதுர்த்தி'யையொட்டி வழி பாடு நடத்துவதற்காக பந்தல் அமைத் துள்ளனர். இந்தப் பந்தலை பா.ஜ.க. தலைவர்கள் தலைமையில் இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று, சூறை யாடியதோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பதி அபோய் நகரின் உள்ளூர் பகுதிக்குழு உறுப்பினர் கவுதம் தேவ்வை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டது.

படுகாயமடைந்த கவுதம்தேவ்வை மக்கள் அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சம்பவத்திற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மேற்கு அகர்தலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.  முற்றுகைக்கு கட்சியின் மேற்கு திரிபுரா மாவட்டக் குழு உறுப்பினர் ரத்தன் தாஸ் தலைமை வகித்தார்.  பின்னர் காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்து புகார் அளித் தனர். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரத்தன் தாஸ்,

“ஆளும் கட்சியின் (பாஜக) விசு வாசிகள் இரு சக்கர வாகனத்தில் திரண்டு வந்து ‘விநாயகர் சதுர்த்தி'க்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலை சூறை யாடியதோடு கவுதம்தேவ்வையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சம்பவம் நடந்து 24 மணி நேரமாகியும்  குற்ற வாளிகள்மீது காவல் துறை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.  

கடந்த 54 மாதங்களாக திரிபுரா மாநிலம் முழுவதும் இதே போன்ற சூழ்நிலை நிலவி வருகிறது.  காவல்துறை வெறும் பார்வையாளராக உள்ளது.  மாநிலத்தின் சீர்குலைந்துள்ள சட்டம்- ஒழுங்கை மீட்டெடுக்க காவல்துறை நடுநிலையோடு செயல்படவேண்டும். மாநிலத்தில் ஜனநாய கத்தை மீட்டெ டுக்க  மக்கள் ஓரணியில் திரளவேண்டும்” என்றார்.  

திரிபுரா மாநில எதிர்க்கட்சித் தலை வரும், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான  மாணிக் சர்க்கார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.

No comments:

Post a Comment