நாகப்பட்டினம் நகர திராவிடர் கழக தலைவரும், கழகக் காப்பாளர்களில் ஒருவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான நாகை மா.குஞ்சுபாபு (வயது 93) அவர்கள் நேற்று (27.9.2022) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
கடைசி மூச்சுள்ள வரை கருஞ்சட்டைத் தோழராக வலம் வந்தவர். மீனவர் பகுதி மக்களுக்குப் பல வகை களிலும் உதவிக்கரம் நீட்டியவர்.
அவரின் அளப்பரிய இயக்கத் தொண்டினை நினைவு கூர்ந்து, அவருக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது வாழ்விணையர் காமாட்சி, மகன் சின்னத்துரை உள்ளிட்ட குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் தஞ்சை
இரா.ஜெயக்குமார் இறுதி மரியாதை செலுத்துவார்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.9.2022
No comments:
Post a Comment