விநாயகரை வைத்து பாலகங்காதரர் துவக்கிய ஹிந்துத்துவ திணிப்பு சுதந்திரத்திற்குப் பிறகு அவ்வப்போது எகிறிக் கொண்டு திரிகிறது!
ஒன்றியத்தில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு ஹிந்துத்துவ சக்திகள் தங்களின் சனாதன - மனுவாத கொள்கைகளை நடை முறைக்கு கொண்டுவர பெரிதும் முயன்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடெங்கும் உள்ள ஹிந்துத்துவ சில்லரை அமைப்புகள் தொடர்ந்து கோட்சேவைக் கொண்டாடி வரு கின்றன.
சாவர்க்கர், கோட்சே போன்றவர்கள் தற்போது தேசியத்தலைவர்களாகிக் கொண்டு இருக்கின்றனர்.
இதுநாள் வரை பூட்டிய அறைகளுக்குள்ளும் நள்ளிரவிலும் கோட்சேவைக் கொண்டாடுவது, சாலைகளில் பெயர் பலகைகளை வைத்துவிட்டு ஓடுவது போன்றவைகளைச் செய்துவந்தவர்கள் தற்போது வெளிப்படையாகவே கோட்சே பதாகைகளை சுமக்கத் துவங்கிவிட்டனர்.
75 ஆவது விடுதலை நாள் கொண்டாட்டத்தின் போது கருநாடகாவில் பல இடங்களில் விடு தலைக்காக போராடிய தலைவர்களின் படங்கள் சிறியதாகவும் - கோட்சே, சாவர்க்கர் படங்கள் மிகப் பெரியதாகவும் இடம் பெற்றிருந்தன. இது குறித்து ஒன்றிய அரசோ அல்லது கருநாடக அரசோ ஒன்றுமே சொல்லாமல் வேடிக்கை பார்த்தன.
கருநாடகா மற்றும் மகாராட்டிராவில் கணபதி 'விசர்ஜன்' எனப்படும் பிள்ளையார் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் ஊர்வலத்தில் பெரிய அளவில் கோட்சே படங்களைத் தூக்கிச்சென்றனர்.
அப்படித் தூக்கிச் செல்லும் போது சிறுபான்மை யினர் குறித்துமிகவும் மோசமான வார்த்தைகளைக் கூறிக் கொண்டு சென்றனர். கருநாடக, மகாராட்டிரா எல்லையில் உள்ள குல்பர்கா நகரில் ஆயிரக் கணக்கானோர் மசூதி ஒன்றைச் சூழ்ந்துகொண்டு மோசமான வார்த்தைகளைப் பேசி கோட்சேவின் கனவை நினைவாக்குவோம் என்று கூச்சலிட்டனர். ஊர்வலம் அப்பகுதி வழியாக செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது முதலே அப் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விட்டனர். மூடிய வீட்டுக் கதவுகளின்மீது ஹிந்துத்துவ அமைப்பினர் தங்களின் ஆத்திரத்தைக் காட்ட கற்களை வீசியும் காவி வண்ண ஸ்பிரே பெயின்ட் அடித்தும் வைத்தனர்.
மும்பையில் பால கங்காதர திலகர்தான் முதன் முதலாக பிள்ளையார் ஊர்வலம் என்ற ஒன்றைப் பூதாகரப்படுத்தி, அதனையே அரசியலாக்கிக் கலவரத்திற்குப் 'பிள்ளையார் சுழி' போட்ட பேர் வழியாவார்.
எலிகளால் பிளேக் நோய் மும்பையில் பரவிய போது - பிரிட்டிஷ் அரசு எலிகளை ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டது. எலி பிள்ளையார் வாகனம் - அதனை கிறிஸ்துவனாகிய வெள்ளைக்காரன் கொல்லுகிறான் - நம் மதவிடயத்தில் தலையிடு கிறான் என்று ஹிந்து மதவெறி நெருப்பைத் தூண்டினார்.
அதன் காரணமாக இரு வெள்ளைக்கார அதி காரிகள் கொல்லப்பட்டனர்; இதனைத் தூண்டியவர் என்ற முறையில் திலகர் தண்டிக்கப்பட்டதுண்டு.
இந்தப் பேர் வழிக்கு "லோக மான்ய திலக்" என்ற பட்டப் பெயர் வேறு. அன்று அவரால் தூவப்பட்ட நச்சு விதைதான் இன்று பேருரு எடுத்து நாட்டையே அலைக் கழிக்கிறது. இளைஞர்களே, இந்தக் கூட்டத்தை அடையாளம் காணுங்கள்.
No comments:
Post a Comment