Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
செவிலியம் - ஒரு சேவையே
September 20, 2022 • Viduthalai

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு கல்வி மட்டுமே வழி என்று உணர்ந்து கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவிகள் பலரும், கல்விக் கட்டணம் செலுத்த முடி யாத காரணத்தால் படிப்பை முழுமையாகத் தொடர முடியாத நிலை இருக்கும். அத்த கைய மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை அளித்து கல்வியைத் தொடர்வதற்கு உதவு கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த தேவிகா ராஜ். 

தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் இவர், சுயமாகத் தொழில் செய்ய வேண்டும் - அதே சமயத்தில், அது மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். 

அவர் கூறியதாவது... 

"2009ஆம் ஆண்டு ஹோம் கேர் நர்சிங் தொழிலைத் தொடங்கினேன். இதன்மூலம் வயதானவர்கள் மற்றும் வீட்டிலேயே மருத் துவச் சிகிச்சைகள் மேற்கொள்பவர்களை கவனித்துக்கொள்ளும் செவிலியர் சேவை அளித்து வருகிறேன். 

தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங் களில், நர்சிங் படிக்கும் மாணவிகளை தான் இதில் ஈடுபடுத்துகிறேன். கிராமங்களில் கல்லூரிக் கட்டணம் கட்ட இயலாத மாணவி கள் அதிகம் உள்ளனர். அந்த மாணவிகளின் பெற்றோர் பெரும்பாலும், விவசாயம் மற்றும் அதுசார்ந்த கூலி வேலைகளையே செய்து வருகின்றனர். 

அத்தகைய மாணவிகள் படிக்கும் கல்வி நிறுவனங்களுடன் பேசி, அவர்கள் கல்வி கற்க வழி செய்கிறேன். செவிலியர் கல்வியை முழுமையாக முடித்தவுடன் மாத வருமானம் அடிப்படையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறேன். அந்தப் பணத்தைக் கொண்டு கல்லூரிக் கட்டணம் செலுத்திய பின்பு, கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கும். இந்த முறையினால் கிராமப்புற ஏழை மாணவிகள் அதிக அள வில் பயனடைகின்றனர். 

மயிலாடுதுறையில் இருந்துதான் முதன் முதலில் செவிலியர் மாணவிகளை சேவைக் குத் தேர்ந்தெடுத்தேன். தற்போது மன்னார் குடி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் மாணவிகள் வருகின்றனர். 

கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, நர்சிங் படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் மாணவிகளையும் இந்த சேவையில் ஈடுபடுத்துகிறேன். 

எனது பணியைப் பாராட்டி, இந்தியா முழுவதும் 50 ஆயிரம் பெண் சுய தொழில் முனைவோர்களைக் கொண்ட சாதனைப் பெண்கள் அமைப்பின் விருது கிடைத்தது. இவ்வாறு கூறினார் தேவிகாராஜ்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn