தமிழ்நாட்டின் கோவிலில் திருட்டுப் போன சிலை அமெரிக்காவில் ஏலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 25, 2022

தமிழ்நாட்டின் கோவிலில் திருட்டுப் போன சிலை அமெரிக்காவில் ஏலம்

சென்னை, செப்.25 தமிழ் நாட்டில் கோவிலில் திருட் டுப் போன சிலை அமெரிக் காவில் ஏலம் விடப்பட்டது. மீட்டுக்கொண்டுவர காவல் துறை நடவடிக்கை எடுத் துள்ளது. தஞ்சை மாவட்டம் முத் தம்மாள்புரம் கிராமத் தில் சிறிகாசி விசுவநாத சுவாமி கோவிலில்   கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கடவுளர் சிலை திருட்டு போய் விட்டது. இந்த சிலைக்கு பதிலாக போலி யான சிலை ஒன்று கோவிலில் வைக்கப்பட்டு விட்டது.   மேற்படி திருட்டுப் போன காலசம்ஹாரமூர்த்தியின் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது.   அதன் விலை 43 லட்சத்து 50 ஆயிரம் அமெ ரிக்க டாலர் என்றும்  இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிலைக்கான உரிய ஆவணங்களை அமெரிக்காவில் உள்ள இந் திய தூதரகம் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள் ளது என்றும், சிலையை தமிழ்நாட்டிற்கு மீட்டுக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment