கடலூர், செ. 15- கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் கழகப் பொதுச் செயலா ளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமை யில், மாவட்ட செயலா ளர் தென் சிவகுமார், மாவட்ட அமைப்பாளர் மணிவேல் ஆகியோர் முன் னிலையில் நடைபெற்றது.
வடலூர் தலைவர் புல வர் ராவணன், கடலூர் தலைவர் எழில் ஏந்தி, இந்திரா நகர் தலைவர் தங்க பாஸ்கர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் செல்வம், பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், மாவட்ட இளைஞர் அணி தலை வர் உதயசங்கர் ,செயலா ளர் வேலு, அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் கனகராஜ், கட லூர் மாதவன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மற் றும் இணையதள செயல் பாடுகள் குறித்து டேனி யல் அசோக் ஆகியோர் பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று கடலூர் மாவட் டத்தில் மூன்று அணி களாக தோழர்கள் புறப் பட்டு தந்தை பெரியார் சிலைக்கு படத்துக்கு மாலை அணிவித்தும், கழக கொடிகளை உயர்த் தியும் பெரியார் பாடல் கள் பேச்சுக்கள் முதலிய வற்றை ஒலிபரப்பியும் பட ஊர்வலமாக சென்று தந்தை பெரியார் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பிரச்சாரக் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது என்றும் முடி வெடுக்கப்பட்டது முடி வில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment