சென்னை,செப்.19 சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார். தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி செப்டம்பர் 12ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றார்.
இந்நிலையில், நீதிபதி துரைசாமி நாளை மறு நாளுடன் (செப்.21) ஓய்வுபெறும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த நீதிபதியான இவர், செப்.22 ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
No comments:
Post a Comment