பெரியார் உணவகம்மீதும் தோழர்கள்மீதும் தாக்குதல் : ஆறு பேர் கைது
கோவை மாவட் டம் காரமடை கண் ணார்பாளையம் சாலையில் நாளை தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஓர் உணவகம் திறப்பு விழா நடை பெறு வதாக இருந்தது. உணவகத்தின் உரிமையாளர் பிரபாகரன் பெரியார் பற்றாளர். தன்னுடைய உணவகத்திற்கு பெரியார் பெயரை வைத்துள்ளார். இது அங்குள்ள இந்து முன்னணி காலிகளுக்கு உறுத்தலாக இருந்தது.
இன்னும் திறப்பு விழாவே நடைபெறாத கடையில் பத்து, பதினைந்து இந்து முன்னணியினர் சேர்ந்து கொண்டு எங்களை அவமானப்படுத்தவே பெரியார் பெயரை வைக்கிறீர்களா? என்று கேட்டு ஆவேசமாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் உணவகத்தில் பணிபுரியும் தோழர்கள் அருண், சூரியா, ஒரு பெண் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு அருண், சூரியா ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
இது தொடர்பாக ஹிந்து முன்னணியினரும் அரசியல் கட்சியினரும் சேர்ந்து நடந்த தாக்குதல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி ஹிந்து முன்னணியைச் சேர்ந்த ரவிபாரதி,சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் ஆகியோர் கா.நி.கு.எண்.493/22 u/s 147,447,294(தீ),323 வீஜீநீ . க்ஷீ/ஷ் sமீநீ 4 மற்றும் பிரிவு 3 தமிழ்நாடு காவல்துறை குற்றவியல் சட்டத்தின் ஹிந்து முன்னணியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment