பெரியாரியத்துக்கு மொழி, நாடு என்ற எல்லைகள் இல்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

பெரியாரியத்துக்கு மொழி, நாடு என்ற எல்லைகள் இல்லை!

Periyarism is a universal ideology!

பெரியார் திடல் போல, ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உருவாக்கும் 

பெரியார் உலகமும் வரலாற்றில் நிலைக்கட்டும்!

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -

சென்னை,செப்.19- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தைபெரியார் 144 ஆவது பிறந்த நாளில் (17.9.2022) சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம்!

“பெரியார் உலகம்”  அடிக்கல் நாட்டு விழா குறித்த பதிவு

அடக்குமுறை எங்கு நடந்தாலும், எந்த வகையில் நடந்தாலும் அதனை எதிர்ப்பதுதான் பெரியாரியம்! அவ்வகையில், பெரியாரியத்துக்கு மொழி, நாடு என்ற எல்லைகள் இல்லை! Periyarism is a universal ideology!  பெரியார் திடல் போல, ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்கள் உருவாக்கும் பெரியார் உலகமும் வரலாற்றில் நிலைக்கட்டும்!  -இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment