Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெண் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கும் உண்டு
August 23, 2022 • Viduthalai

“தற்போது பொருளாதாரத்தை மய்யப் படுத்தித்தான் நமது வாழ்க்கை நகருகிறது. கிராமங்கள், நகரங்களில் வசிக்கும் நடுத்தர, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங் களில் உள்ள கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது கட்டாயம்.

எனவே, குழந்தைகளை வளர்ப்பதில் முழு நேரத்தையும் செலவிட அவர்களால் முடிவதில்லை. இதனாலும் குழந்தைகள் தங்கள் விருப்பம்போல இருக்கவும், அடுத்த வர்களின் சீண்டல்களுக்கு ஆளாகவும் நேரிடுகிறது. இணையதளம், சமூகவலை தளங்களில் வரும் ஆபத்து நிறைந்த நிகழ்ச்சி கள், தவறான பாதைக்குள் தள்ளும் தகவல் கள், இளைய சமுதாயத்தின் உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தப்படு கின்றன. வாட்ஸ்அப், முகநூலில் வரும் அபாய தகவல்கள் எளிதாக மாணவிகளின் மனதுக்குள்ளும் ஊடுருவி பாழ்படுத்து கின்றன.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பேசிப் பழகினால் அதை காவல்துறையினர் கண்டு பிடிப்பது கடினமானது. இதில் பழகிய 14 வயது சிறுமியும், 19 வயது இளைஞரும் சென் னைக்குச் சென்றனர். அங்கு ஒருவரிடம் சிக்கிய சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிகழ்வு வெளிவந்துள்ளது. இதற்கு யார் காரணம்? சிறுமியின் அறியாமை என் பதா அல்லது சமூகவலைதள மோகம் என் பதா? பல்வேறு பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளில் சிக்கும் மாணவிகளுக்கு கலந் தாய்வு அளிக்கிறோம். அவ்வாறான நேரங் களில் அவர்களுடன் உரையாடும்போது, தங்களிடம் பழகியவர்களை அவர்கள் விட்டுக் கொடுப் பதே இல்லை.

இதற்கு அவர்களின் வீட்டில் உள்ள வர்கள், இதுபோன்ற நிலையில் இருக்கும் மாணவிகளிடம் போதிய அன்பு காட்டுவ தில்லை என்ற காரணத்தை அறிய முடிகிறது. எனவே பெற்றோர், தங்களின் பிள்ளை களிடம் இணக்கமாக இருந்தால்தான், இது போன்ற தவறுகள் தவிர்க்கப்படும். பள்ளி களில் முன்பைப்போல மாணவர்களைக் கண்டிக்க முடிவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

மாணவ-மாணவிகள் பாலியல் சம்பந்த மான பிரச்சினைகளில் சிக்கினால், மீண்டும் அந்தப் பள்ளியில் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. உடனடியாக நீக்கப்படு கின்றனர். தெரிந்தோ, தெரியாமலோ இது போன்ற நிகழ்வுகளில் சிக்கிய அவர்களை அந்தப் பள்ளியே நிராகரித்தால் அவர்கள் எங்கே போவார்கள்? இளம் சமுதாயத்தின ருக்கு சரியான வழியைக் காட்ட வேண்டு மானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்பம் என அனைத்தையும் மாற்றுப்பாதைக்கு கொண்டு செல்வது அவ சியம். ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனைக ளையும் இளைய சமுதாயத்திற்கு கற்றுத் தருவதற்கான கோட்பாடுகளை செயல்படுத் துவது அரசின் கடமை. இதை பள்ளிகளின் வாயிலாகத்தான் நிறைவேற்ற முடியும்”

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn