காமாலைக் கண்ணு 'தினமலரே!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

காமாலைக் கண்ணு 'தினமலரே!'

கருப்பு துக்கத்தின் அடையாளம் என்று கிண்டல் செய்கிறது. போராட்டம் என்றால், எந்தக் கட்சியும் வித்தியாசம் இல்லாமல் கருப்புடை அணிந்து வீதிக்கு வருகிறார்களே, ஏன்?

ஓ, போராட்டம் என்றாலே, 'தன்னெஞ்சே தன்னைச் சுடும்' என்ற பாணியில் பார்ப்பனக் கூட்டம் பதை பதைக்கிறதே!

அது சரி, கருவிழி கருப்பு என்பதால், பிடுங்கி எறிந்து விடுவீர்களா? வழக்குரை ஞர்களும், நீதிபதிகளும் கருப்புடை அணிவது துக்கத்தின் அடையாளமா?

கருப்பான ஹிந்துக் கடவுள்களை குப்பைமேட்டில் ஒதுக்கித் தள்ளப் போகிறீர்களா?

அட காமாலைக் கண்ணே! உன்னை சொல்லிக் குற்றமில்லை - உங்கள் பூணூல் புத்தியின் விபரீதப் பார்வை அது!

No comments:

Post a Comment