'நீட்' விலக்கு: குடியரசுத் தலைவரின் ஒப்புதல் எதிர்பார்ப்பு அமைச்சர் மா. சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

'நீட்' விலக்கு: குடியரசுத் தலைவரின் ஒப்புதல் எதிர்பார்ப்பு அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மதுரை,ஆக.20- நீட் தேர்வு விலக்கு குறித்து உள்துறை அமைச்சத்தின் கேள்விக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி யில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது இந்த ஓமியோபதி கல்லூரியில் 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஏக்கர் பரப்பள வில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதால் கல்லூரி தாழ்வான பகுதியாகி விட்டது. இதனால் மழைக்காலங்களில் மாதக் கணக்கில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கல்லூரி கட்டடங்கள், வகுப்பறைகள், ஆய்வகம் ஆகியவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் கால்வாய் அமைத்து அதை குண்டாற்றுடன் இணைத்து விட்டால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளனர். அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு 

இதனை மீறி மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குமா? என ஆய்வு செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களைக் கொண்டு 10 நாட்களுக்குள் இந்த இடத்தில் ஆய்வு நடத்த உள்ளனர். ஆய்வறிக்கையின்படி மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி கட்டடத்திற்கு சேதம் ஏற்படும் என தெரிய வந்தால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்படும். இதற்கு கல்லூரி நிர்வாகம் மாணவப் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்பினர் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் பெற்று இந்த முடிவு செய்யப்படும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் படி ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டட வளாகம் கட்டப்படும். அந்தப் பணிகள் நிறைவடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும். அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதி யில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் கேட்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஆணையாளரின் அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன். 

-இவ்வாறு அவர் கூறினார். 

நீட் தேர்வு 

நீட் தேர்வு குறித்த கேள்விக்கு  தமிழ்நாடு அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்வி களை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.தமிழ் நாட்டில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு எங்கும் கிடை யாது. இது தவறான குற்றச்சாட்டு என தெரிவித்தார்.


No comments:

Post a Comment