முல்லைப் பெரியாறு முதலமைச்சர் ஸ்டாலின் - பினராயி விஜயன் சந்தித்து உரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

முல்லைப் பெரியாறு முதலமைச்சர் ஸ்டாலின் - பினராயி விஜயன் சந்தித்து உரையாடல்

சென்னை, ஆக.31- ஒன்றிய உள்துறை சார்பில் திருவனந்தபுரத்தில் செப்.3ஆ-ம் தேதி நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத் தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி, 2-ஆம் தேதி கேரளா செல்லும் அவர்,கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து முல்லை பெரியாறு உள்ளிட்ட திட்டங்கள் குறித்துபேசுகிறார்.

மாநிலங்களின் சட்டம் - ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் தொடர் பாக மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படும். அந்த வகையில், தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் வரும் செப்.3ஆ-ம் தேதி கேரள தலைநகர் திருவனந்த புரத்தில் நடத்தப்படுகிறது.

இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின் றனர். இதற்கு ஒன்றி உள்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதை ஏற்று, தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ப தற்காக செப்.2-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு அன்றைய தினம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசுகிறார். அப்போது, முல்லை பெரியாறு, சிறுவாணி, நெய்யாறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படு கிறது.செப்டம்பர் மாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் சுற்றுப்பயணம் மேற் கொள்கிறார். நாளை செப்.1ஆம் தேதி திருப்பூர் செல்லும் அவர், அங்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல் லத் திருமண விழாவில் பங்கேற்று விட்டு, அன்றே சென்னை திரும்பு கிறார். 2ஆ-ம் தேதி கேரளா செல்லும் அவர், 3ஆ-ம் தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டத் தில் பங்கேற்ற பிறகு, சென்னை திரும்புகிறார்.

செப்.5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று சென்னையில் நடை பெறும் புதுமைப்பெண் திட்டம், மாதிரி பள்ளி, தகைசால் பள்ளி கள் தொடக்க விழாவில் டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் பங்கேற்கிறார்.

பின்னர், 7ஆம் தேதி கன்னியா குமரி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயண தொடக்க விழாவில் பங்கேற்று, பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அன்று இரவு திரு நெல்வேலியில் தங்கும் அவர், மறுநாள் 8-ஆம் தேதி திருநெல் வேலி ஹைகிரவுண்டில் நடை பெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற் கிறார். அன்று இரவு மதுரையில் தங்கும் முதலமைச்சர், மறுநாள் 9-ம் தேதி வணிகவரி, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிறகு, சென்னை திரும்புகிறார்.

இதுதவிர, செப்.15ஆ-ம் தேதி சாத்தூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா, தொடர்ந்து நடைபெறும் பள்ளி சிற்றுண்டி தொடக்க விழா ஆகியவற்றிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறப்படு கிறது.


No comments:

Post a Comment