தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் "நெய்தல் உப்பு" விற்பனை தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் "நெய்தல் உப்பு" விற்பனை தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று  (12.8.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் "நெய்தல் உப்பு ” என்ற புதிய வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் உப்பு விற்பனையினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது,   தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு,   தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்  சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  எஸ். கிருஷ்ணன்,   தொழிலாளர் ஆணையர் டாக்டர் அதுல் ஆனந்த்,   தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர்  கு.இராசாமணி,   மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment