ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் பேச்சு.

* எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பீகார் முதல மைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ் வியை சந்திக்கிறார் கே.சந்திரசேகர ராவ்.

* ஒன்றிய அரசின் முகவர்களாக இருக்கும் ஆளுநர் பதவி தேவையா? என்கிறார் எழுத்தாளர் சுனந்தா தத் ரே.

* பார்ப்பனரல்லாதார் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்தும், கோயிலை அரசு நிர்வாகம் செய்வதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சுப்ரமணியன் சுவாமி மனுவின்படி தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் தமிழ் நாடு அரசுக்கு தாக்கீது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* 2024இல் பாஜகவை வீழ்த்திட மம்தா சூளுரை.

* காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தில் ராகுல் காந்தி நடந்தே செல்ல முடிவு.

* மதுரையைச் சேர்ந்த மாணவருக்கு பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்கு தொலைதூர லட்சத்தீவில் தேர்வு மய்யம் ஒதுக்கப்பட்டுள்ள அவலம்.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment