தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற ஈரோடு - கோவை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற ஈரோடு - கோவை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல்

ஈரோடு, ஆக. 14- ஈரோடு- கோவை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.8.2022 வியாழன் மாலை 5.30 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. ஈரோடு, கோவை, திருப் பூர், நீலமலை, தாராபுரம், நாமக்கல், கோபி மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் திரளாகக் கலந்துகொண் டனர். 

தலைமை உரையாற்றிய ஆசிரியர் அவர்கள் தமது உரையில், "60 ஆயிரம் விடுதலைச்சந்தா சேர்க்கும் நோக்கம் மக்களுக்கு உண்மையான கருத்துகள் போய்ச் சேரவேண்டும், என்பதே உண்மை, நேர்மையான கருத்துகளை துணிவுடன் எடுத்துவைக்கும் ஒரே இதழ் விடுதலை" என்றார். 

கூட்டத்தில் பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில அமைப்புச்செயலாளர்கள் ஊமை ஜெய ராமன், ஈரோடு த.சண்முகம், பேராசிரி யர்கள் முனைவர் ப.காளிமுத்து, முனை வர் தவமணி, கோவை மண்டல தலை வர் அ.கருணாகரன், செயலாளர் சிற்ற ரசு, ஈரோடு மண்டல தலைவர் இரா.நற்குணன், செயலாளர் கோபிராஜ மாணிக்கம், ஆகியோர் முன்னிலை வகித் தனர். முன்னதாக கேரவை மாநகர தலை வர் புலியகுளம் வீரமணி கடவுள் மறுப்புக்கூறினார். மாவட்ட தொழிற் சங்க செயலாளர் தே.காமராஜ் அனை வரையும் வரவேற்றார். 

கூட்டத்தில் அவினாசி ப.க.பொறுப் பாளர் ஆசிரியர் ராமசாமி, ஈரோடு மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, செய லாளர் மா.மணிமாறன், மேட்டுப்பா ளையம் மாவட்ட தலைவர் வேலுசாமி, கோவை மாவட்ட தலைவர் சந்திர சேகரன், செயலாளர் செந்தில்நாதன், தாராபுரம் மாவட்ட தலைவர் கணியூர் கிருஷ்ணன், செயலாளர் க.சண்முகம், திருப்பூர்மாவட்ட செயலாளர் யாழ் ஆறுச்சாமி, கோவை மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மாநில இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன், கோவை மண்டல இளை ஞரணி செயலாளர் முனீஸ்வரன், வழக் குரைஞரணி மாநில துணைத்தலைவர் பாண்டியன், நீலமலை மாவட்டச் செயலாளர் நாகேந்திரன், பெரியார் மருத்துவக் குழுமம் தலைவர் டாக்டர் கவுதமன், நாமக்கல் மாவட்ட செயலா ளர் பெரியசாமி, கோபி மாவட்ட தலை வர் சிவலிங்கம். ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

ஆகஸ்ட் 25க்குள் கோவை - ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங் களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதலை" சந்தாவை சேகரித்து தருவது எனவும், ஆகஸ்ட் 27 நடைபெறும் விடுதலை" சந்தா வழங்கும் விழாவில் குடும்பத் துடன் கலந்துகொள்வது எனவும் முடி வெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் தாராபுரம் நகர கழக செயலாளராக சின்னப்பதாஸ், தாரா புரம் நகரத் துணைத்தலைவராக மணி, மேட்டுப்பாளையம் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் மேடூர் மு.வீரமணி, மாவட்ட இளைஞரணி செய லாளராக குட்டைப்புதூர் நா.பிரதீப் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். 

இறுதியாக ஈரோடு மாவட்ட செயலாளர் மா.மணிமாறன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment