போபால், ஆக. 11- மத்தியப்பிரதேச மாநிலத்தில் சாமியார் மிர்ச்சி பாபா என்கிற வைராக்யானந்த் கிரி என்பவர் மீது பெண் ஒருவர் போபால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், ‘திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த தனக்கு இவரது தொடர்பு கிடைத்தது. கடந்த ஜூலை 17ஆம் தேதி சாமியாரை சந்தித்த போது, அவர் கொடுத்த தீர்த்தத்தை வாங்கி குடித்த சில நிமிடங் களில் மயக்கமடைந்து விட்டேன். பின்னர், அவர் என்னை பாலியல் வன்முறை செய்தது தெரிய வந்தது. சமூக அவமதிப்புக்கு அஞ்சி சாமியார் மீது உடனடியாக புகார் அளிக்கவில்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சாமியார் மீது பாலியல் வன்முறை வழக்கு பதிவுசெய்யப்பட்டு போபால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வரும் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment