புதுடில்லி, ஆக. 11- கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று (11.8.2022) காலை அறிக்கை வெளியிட்டது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,299 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 16,047 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டில்லியில் 2,146, மகாராட்டிராவில் 1,847, கருநாடகாவில் 1,680, கேரளாவில் 1,317, அரியானாவில் 1,145 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 6 ஆயிரத்து 996 ஆக உயர்ந்தது.
கரோனா பாதிப்பில் இருந்து நேற்று (10.8.2022) 19,431 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்த வர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 55 ஆயிரத்து 41 ஆக உயர்ந்தது. தற்போது 1,25,076 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,185 குறைவு ஆகும். கரோனா பாதிப்பு காரணமாக மேலும் 53 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,879ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment