மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறந்த சேவை - தமிழ்நாடு அரசின் மாநில விருது அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறந்த சேவை - தமிழ்நாடு அரசின் மாநில விருது அறிவிப்பு

சென்னை,ஆக.11- மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

2022ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது தமிழ்நாடு அரசின் மாநில விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்படி சிறந்த மாவட்ட ஆட்சியர்களாக தினேஷ் பொன்ராஜ், அருண் தம்புராஜ் தேர்வாகி உள்ளனர். சிறந்த மருத்துவராக உதகையை சேர்ந்த ஜெய் கணேஷ் மூர்த்தி அறிவிக்கப்பட் டுள்ளார். வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனமான புதுக் கோட்டையில் உள்ள ரெனோசான்ஸ் அறக்கட்டளைக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சமூகப் பணியாளராக மதுரையை சேர்ந்த அமுத சாந்தி தேர்வாகி உள்ளார். மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய நிறுவனம் என டாபே ஜெ ரிஹாப் சென்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக திண்டுக்கல் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்வாகி உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்ததற்காக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களுக்கான விருது சுதந்திர தின விழாவின் போது முதல் அமைச்சரால் வழங்கப்படும் என் றும், மாவட்ட ஆட்சியருக்கான விருது மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்படும் என்றும் அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment