ரயில் நிலைய விசாரணை மற்றும் உதவி மய்யம் பெயர் மாற்றம்: சு.வெங்கேடசன் சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

ரயில் நிலைய விசாரணை மற்றும் உதவி மய்யம் பெயர் மாற்றம்: சு.வெங்கேடசன் சாடல்

புதுடில்லி,ஆக.4 ரயில் நிலைய விசாரணை மய்யங்களின் பெயர் “சஹ்யோக்” என்று மாற்றம் என்ற உத்தரவு ஹிந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி.,  விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள  விசாரணை மற்றும் உதவி மய்யங்களின் பெயர்களை மாற்ற ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மய்யங்களின் பெயர்களை “சஹ்யோக்” என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட் டுள்ளது, ஹிந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை வன்மையாக கண்டிக்கிறேன். ஒன்றிய ரயில்வே அமைச்சர் தலையிட்டு உத்தரவை திரும்பப் பெற வேண்டுகிறேன்." இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment