அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொதுவான நிலையாணை அமைக்க குழு அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொதுவான நிலையாணை அமைக்க குழு அரசாணை வெளியீடு

சென்னை,ஆக.5- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொதுவான நிலை யாணை உருவாக்குவதற்கான குழு அமைத்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலர் கே.கோபால் அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களின் ஊதிய பிடித்தம், தண்டனை போன்றவை கோட்ட அளவில் மாறுபடும். இதை விடுத்து அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொதுவான நிலை யாணையை உருவாக்க வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பும் அளித்திருந்தது. அதன்படி, போக்குவரத்து துறை செயலர் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, போக்குவரத்துக் கழகங்களுக்கு பொதுவான நிலையாணையை அமைப்பது தொடர்பாக நிர்வாகம்மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்குமாறு போக்குவரத்து கழக வழக் குரைஞர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குழு உறுப்பினர்கள்

இதன் தொடர்ச்சியாக மாநகரபோக்குவரத்து கழகம், விரைவுபோக்குவரத்து கழகம், சாலை போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள், மாநகர போக்குவரத்து கழக தலைமை நிதி அலுவலர், கும்பகோணம் போக்குவரத்துக் கழக முதுநிலை துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு) ஆகிய துறைசார் அலுவலர்களும், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை(எல்பிஎப்), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் (சிஅய்டியு), தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழக பணியாளர் சம்மேளனம் (டிடிஎஸ்எப்) ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது. இக்குழு, பொதுவான நிலையா ணையில் அடிப்படை சரத்துகளில் மாற்றம் செய்யாமல், ஒரே மாதிரியான நிலையாணையை தயார் செய்து அளிக் குமாறு அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment