மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற ஓபிசி தோழர்கள் சந்திப்பு கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற ஓபிசி தோழர்கள் சந்திப்பு கூட்டம்

மதுரை, ஆக. 15- ஓபிசி நல சங்கத்தின் சார்பில் ஒவ் வொரு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நகரங்க ளில் யூனியன் வங்கி ஓபிசி நல சங்கதோழர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடை பெற வேண்டும் என திருப்பூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்ட முடி வின்படி, மதுரை நகரில் 13.8.2022 சனிக்கிழமை காலை 11 மணி முதல் 2 மணி வரை ஓபிசி உறுப் பினர்கள் சந்திப்பு கூட் டம் சிறப்பாகவும் எழுச்சியு டன் நடைபெற்றது. மதுரை இசைக் கல்லூரி கலைஞர் களின் மெல்லிசையோடு துவங் கிய கூட்டத்திற்கு நல சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி தலைமை வகித்தார். 

நல சங்கத்தின் மதுரை பிராந்திய செயலாளர் எஸ்.சிவராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் தோழமை அமைப்புகளின் நிர்வாகி கள்: சுந்தரராஜன் (ஜி. அய்.சி.- நியூ இந்தியா காப் பீடு), தனசேகர் (துணைத் தலைவர், கனரா வங்கி ஓபிசி சங்கம்),  நல சங்கத் தின் நிர்வாகிகள்: ஜி.ராஜகவிதா (இணை செயலாளர்), எஸ்.முனி ரத்தினம் (துணைத் தலை வர்), மத்திய குழு உறுப் பினர் செல்வகுமார் ஆகி யோர் உரையாற்றினர்.

தனது தலைமை உரை யில், சமூக நீதி வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றை எடுத்துக் காட்டி, இன் றைய தினம் ஒன்றுபட்டு போராட வேண்டிய சூழல் உள்ளதை கோ.கருணாநிதி எடுத்துரைத் தார்.

கூட்டத்தில் பங்கு கொண்ட தோழர்கள்: ரங்கராஜ் (மதுரை முதன்மை கிளை), கருப்புசாமி (பைபாஸ் ரோடு கிளை) ஆகியோர் தங்களது கருத் துகளை பகிர்ந்து கொண் டனர். இது போன்று கூட்டங்கள் அவ்வப் போது நடைபெற வேண் டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

நல சங்கத்தின் துணைத் தலைவர் ஜி.பழனி குமார் நன்றியுரை கூற மதிய உணவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை, மதுரை பிராந்தியத்தில் வங்கியின் தலைமை நிர்வாகிகள் வருகை, கூட் டம் என அத்தனையையும் கடந்து, மதுரை நகரில் உள்ள தோழர்கள் சிறப் பாக கலந்து கொண்டனர்.  மேலும் அருகில் கிளை கள் மற்றும்  தூத்துக்குடி, நெல்லை மாவட்ட தோழர்களும் கலந்து கொண்டு தங்களது உணர்வையும் ஆதரவை யும் வெளிப்படுத்தினர். அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நமது நிர் வாகிகள்: ஜி.ராஜகவிதா, பி.கோலப்பன், டி.சாம் ஜெபசிங், பி.மகராசன் ஆகியோருக்கு நன்றிகள்; பாராட்டுகள். ஓபிசி சந் திப்பு கூட்டத்தில் தோழி யர்கள் திரளாக கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு.

இந்நல சங்கத்தின் சார்பில் மாநிலத்தின் பிற நகரங்களிலும் ஓபிசி தோழர்கள் சந்திப்பு கூட் டம் நடத்த, மதுரையில் நடைபெற்ற கூட்டம் மேலும் உற்சாகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது.

நிகழ்ச்சி வெற்றிகர மாக அமைய அனைத்து கிளைத் தோழர்களையும் தொடர்பு கொண்டு கூட்ட ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த தோழர் கள் எஸ்.சிவராம கிருஷ் ணன், ஜி.பழனி குமார், செல்வகுமார் ஆகியோ ருக்கு நமது சிறப்பான பாராட்டுகள். வாழ்த்து கள். மதுரை நகரில் எழுச் சியுடன் நடைபெற்ற ஓபிசி கூட்டத்தில் கலந்து கொண்ட தோழமை அமைப்புகளின் நண்பர் களுக்கும் நமது நன்றிகள்.

No comments:

Post a Comment