''பெரியார் சிலையை உடைப்பேன் '' என்ற பேர்வழியின் முன்பிணையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 12, 2022

''பெரியார் சிலையை உடைப்பேன் '' என்ற பேர்வழியின் முன்பிணையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

சென்னை, ஆக.12- பெரியார் சிலை குறித்து அவதூறு பேசியவர்மீது பதிவு செய்யப் பட்ட வழக்கில்  கைது செய்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை  தெரிவித்த தையடுத்து முன்பிணை கோரிய  இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்து முன்னணி அமைப்பின் இந்துக் களின் உரிமை மீட்புப் பிரச்சார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுர வாயலில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், சிறீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியிருந் தார். இதுதொடர்பாக குமரன் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில், இரு பிரிவினரி டையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக கனல் கண் ணன்மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்பிணை கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர் களுக்கு மேல் தரிசிக்க வரும் சிறீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங் களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்குப் புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாச கங்கள் தான் இந்திய தண்டனை சட்டத் தின்கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை,  தன் மீது வழக்குப் பதிவு செய் துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக இந்து மத கடவுள்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதி ராக பல காட்சிப் பதிவுகள் பதிவிடப்படுவ தாகவும், அவை தொடர்பாக தனி நபர் களும், அமைப்புகளும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, இரு பிரிவினரிடையே பகையை உண்டாக் கும் வகையில் கனல் கண்ணன் பேசியதற்கு ஆதாரம் உள்ளதாக    தெரிவிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து விசாரிப்பது கட்டாயம் என்பதால் கனல் கண்ணனுக்கு முன் பிணை வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கனல் கண்ணனின் முன் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment