சென்னை,ஆக.18 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 649 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறையத் தொடங்கியுள்ளது. நேற்றைய (17.8.2022) கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 649 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய் யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 60,810 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப் பில் இருந்து நேற்று ஒரே நாளில் 906 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 35 லட்சத்து ,16,146 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பாதிப்பால் நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளாகி தற்போது வரை 6 ஆயிரத்து 631 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்ச மாக சென்னையில் 2 ஆயிரத்து 602 பேரும், கோவையில் 655 பேரும், செங் கல்பட்டில் 397 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Thursday, August 18, 2022
தமிழ்நாட்டில் 649 பேருக்கு கரோனா தொற்று
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment