அரசு மருத்துவமனை - 4318 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் மா.சு. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

அரசு மருத்துவமனை - 4318 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் மா.சு.

ஈரோடு, ஆக.8 ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

 தமிழ்நாடு அரசின்  நிதிநிலை அறிக்கையின்போது 136 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. மருத் துவத்துறை அறிவிப்பான இந்த 136 அறிவிப்புகளும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் வழிகாட்டுதல்படி மக்கள் நல்வாழ்வுத் துறையின் அனைத்து அறிவிப்புகளும் அடுத்த நிதிநிலை அறிவிப்புக்குள் நிறை வேற்றப்படும். அந்த வகையில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று  தாளவாடி பகுதியில் இருக்கும் ஓசூர் கிராமத்தில் குறிப்பாக பழங் குடியினர் வசிக்கும் கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் பழனி, ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங் கலம் மற்றும் தாளவாடி, கன்னியா குமரி மாவட்டம், திருச்சி மாவட் டம் உள்பட 12 பழங்குடியினர் வசிக்கும் வட்டாரத்தில் கருவுற்ற தாய்மார்கள் இடையே ஹீமோ குளோபின் குறைபாடு உள்ளதா? என்பதை கண்டறிந்து அந்த நோய்க்கு மரபணு ஆலோசனை வழங்கும் ஒவ்வொரு இடத்திற்கும் 14 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தை இந்த கிராமத்தில் தொடங்கி வைத்திருக்கிறோம். வீடுகள் தோறும் தேடிச்சென்று வளர் இளம்பெண்களுக்கும், கரு வுற்ற தாய்மார்களுக்கும் இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.  

ரத்த சோகை பாதிப்பு மலை கிராம மக்கள் இடையே பரவி வரும் சூழ்நிலையில் இதை தடுப் பதற்கும் இந்த நோயின் தன்மை குறித்த விழிப்புணர்வை மக்களி டையே ஏற்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொது வாக ஆணும், பெண்ணும் இரு வருக்கும் இந்த நோய் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அந்த நோய் பாதிப்பு இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. எனவே அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படும் சூழ் நிலையில் அவர்களுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் ஓ.ஆர்.எஸ். என்ற கரைசல் மருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தரப்பட்டு வருகிறது.  அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என செவிலியர்கள் சொல்வார்கள். அதோடு மட்டுமல் லாமல் தாளவாடி மருத்துவமனை யில் பெரிய அளவு வசதிகள் இல்லை என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இங்குஉடற் கூராய்வு செய்யும் வசதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதற்காக ஒரு கட் டடம் இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அவை நடைமுறை யில் இல்லை. தற்போது இறப்பு ஏற்பட்டால் அவர்களை கருநாட கத்திற்கும் அல்லது சத்தியமங்கலம் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லும் சூழ்நிலை உள்ளது. இத னால் பெரிய அளவில் சட்ட சிக்கல் கூட ஏற்படும். எனவே உடற்கூராய்வு கூடம் ஒன்று உடனடியாக அமைக் கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான் அதிகாரி களிடம் பேசி தாளவாடி பகுதிக்கு ஏற்படுத்தி தர இருக்கிறோம். 

மேலும் தாளவாடி மருத்துவ மனையில் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து கடிதம் தந்துள்ளார்கள். அது குறித்தும் சென்னைக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க செய்யப்படும். தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் இன்னுயிர் காக்கும் திட்டம், தொலைதூர மருத்துவ சேவை, 2025-க்குள் காச நோய் இல்லாத தமிழ்நாடு இப்படி பல திட்டங்களை முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தொழு நோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இது தவிர புன்னகை என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. ஒரு மலை கிராமத்தில் படித்த பெண் ஒருவ ருக்கு கணினி  வாங்கி கொடுக் கப்பட்டு அந்த பெண்ணுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அந்தப் பெண்ணின் மூலம் வழங்கும் வகையில் அந்த திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டை பொறுத்தவரை 45 மலை கிரா மங்கள் உள்ளன. இந்த 45 மலைக் கிராமங்களிலும் புன்னகை திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள் ளப்படும். இதன் மூலம் அந்தந்த மலை கிராமங்களுக்கு இணையதள வசதி, படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அந்த இளைஞர் மருத்துவர்களோடு பேசி அந்த மலை கிராம மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முடியும். முதல்-அமைச்சர் கவனத்திற்கு இதுகுறித்து கொண்டு செல்லப்பட்டு தேவையான நிதி ஆதாரம் பெறப்படும். கரு முட்டை தானம் என்பது சட்டபூர்வமாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 21 வயது முதல் 35 வயதுக்குள் பெற்றெடுக்கிற தாயின் கரு முட்டைகளைக் கொடுக்கிற வகையில் சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இங்கு நடந்தது 16 வயது இளம்பெண்ணிடம் 6 மருத்துவமனைகள் தொடர்ச்சியாக கருமுட்டை எடுத்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் 4 மருத்துவமனைகள் மற்ற 2 ஆந்திரா, கேரளாவில் உள்ளது. இது தொடர்பாக நமது துறையின் செயலாளர் அந்தந்த செயலாளர்களுக்கு கடிதம் எழுதி யுள்ளார். இது தொடர்பாக மருத் துவமனைகள் என்னென்ன விதி முறைகளை கடைப்பிடிக்க வேண் டும் என்பது குறித்து தெளிவாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப் படும். தமிழ்நாட்டில்  போலி மருந்து, தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும். மருத்துவத் துறையில் விரைவில் 4318 பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment