பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 5 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.10,000 வழங்கினார். உடன்: பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன். (9.8.2022, பெரியார் திடல்)]
முனைவர் உ.பிரபாகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 1 ஆண்டு விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.2000 வழங்கினார். உடன்: பேராசிரியர் பி.இரத்தினசபாபதி, முனைவர் வாசு அறிவழகன். கலைவேந்தன் பிறந்தநாளை முன்னிட்டு, எல்லாபுரம் ஒன்றிய தலைவர் அருணகிரி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 3 ஆண்டு, 2 அரையாண்டு சந்தாக்கள் என மொத்தம் ரூ.8000 வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் (9.8.2022, சென்னை). அரியலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறிவன், துணைத் தலைவர் வீரா திராவிட வித்து, மாணவர் கழகத் தோழர் வெற்றி செல்வன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து அரையாண்டு விடுதலை சந்தா ரூ .1000 வழங்கினர். சீர்காழி தோழர் ராமண்ணா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை சந்தா ரூ.2000 வழங்கினார் (7.8.2022, சென்னை). பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தருமன் வீரமணி, தமிழர் தலைவரிடம் விடுதலை அரையாண்டு சந்தாவுக்கான தொகை ரூ.1000/- வழங்கினார் (7.8.2022, சென்னை).
சென்னை அடையாறு கோ.ரமேஷ் பாபுவிடமிருந்து ஓர் ஆண்டிற்கான விடுதலை சந்தாவினை பெற்றுக் கொண்டார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ். மேட்டுப்பாளையம் அம்மன்துரை (திமுக), மேட்டுப்பாளையம் பிரபாகரன்.நகர் திருமக்காள், மேட்டுப்பாளையம் 25ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் உமாராணி கணேசன், மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞரணி தலைவர் வீரமணி ஆகியோர் ‘விடுதலை' ஆண்டு சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, நகரச் செயலாளர் சந்திரன் ஆகியோரிடம் வழங்கினர். உடன்: காரமடை ராஜா, செல்வராசு (8.8.2022). ஏ.அய்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் பழ.இராமச்சந்திரன், காரைக்குடி தி.மு.க. 12 ஆவது வட்டக் கழக செயலாளர் இரா.இராதாகிருட்டிணன் ஆகியோர் விடுதலை ஓராண்டு சந்தாக்களை பொதுக்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணியிடம் வழங்கினர்.
தி.மு.க. கோபி நகரசெயலாளர், கோபி நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.நாகராஜ் விடுதலை 10ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம் ஆகியோரிடம் வழங்கினார் (05-08-2022). ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் விடுதலை 100ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை (11-08-2022) இன்று ஈரோடு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நேரில் மகிழ்வுடன் வழங்குவதாக கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம் ஆகியோரிடம் உறுதியளித்தார் (05-08-2022). ம.தி.மு.க ஈரோடு மாவட்ட செயலாளர் ந.கந்தசாமி விடுதலை 5ஆண்டு சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம் ஆகியோரிடம் வழங்கினார்(05-08-2022)
No comments:
Post a Comment