அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீதான காலணி வீச்சு பாஜக மகளிர் அணியினர் 3 பேர் கைது - சிறையில் அடைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீதான காலணி வீச்சு பாஜக மகளிர் அணியினர் 3 பேர் கைது - சிறையில் அடைப்பு

மதுரை, ஆக.17 தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  கார் மீது காலணியை வீசிய நிகழ்வு தொடர்பாக, தமிழ்நாடு பாஜக மகளிரணியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மதுரை மாவட்டம், து. புதுப்பட்டி ராணுவ வீரர் லட்சுமணன் உடல் கடந்த சனிக் கிழமை பகல் 11.30 மணிக்கு மதுரை விமான நிலை யத்திற்கு வந்தது. அப்போது, அரசின் விதி முறைப்படி, ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்த தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விமான நிலைய வளாகத்திற்கு வந்தபோது, சலசலப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து விமான நிலையத்தைவிட்டு அமைச்சர் வெளியே காரில் வந்தபோது, அவரது வாகனத்தை திடீரென வழிமறித்த பாஜகவினர் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும், கூட்டத்தில் இருந்த பாஜக பெண் நிர்வாகி ஒருவர் தனது காலணி எடுத்து அமைச்சர் கார் மீது வீசினார்.

இந்நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவழியாக பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி, அமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மதுரை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன் பாஜக பெண் நிர்வாகி உட்பட 40-க்கும் மேற்பட்டோர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உட்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தார். இவர்களில் பாஜகவைச் சேர்ந்த மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார் என்ற மார்க்கெட் குமார் (48), பிரச்சார பிரிவு செயலர் பாலா (எ) பாலசுப்பிரமணியன் (49), திருச்சியைச் சேர்ந்த பாஜக கட்சி நிர்வாகி ஜெயகருணா (39), கோபிநாத், (42), மற்றொரு கோபிநாத் (44), முகமது யாகூப் ( 42), முன்னாள் மாநகராட்சி மண்டலத் தலைவரும், தற்போது மதுரை மாவட்ட பாஜக துணை தலைவர் ஜெயவேல் (55) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும், அமைச்சரின் கார் மீது காலணியை வீசி பெண் நிர்வாகி உள்ளிட்டோர் குறித்து நிகழ்வு தொடர் பான காணொலி ஆதாரங்களை வைத்து துணை காவல் ஆணையர் சீனிவாச பெருமாள் தலை மையில் காவல் ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்ட காவல்துறையினர் அடங்கிய தனிப்படையினர் விசாரித்தனர்.

அமைச்சரின் கார் மீது காலணியை வீசிய வர்கள் மதுரை மாநகர மாவட்ட மகளிர் அணி செயலாளரான விளாங்குடி அன்னை தெரசா தெருவைச் சேர்ந்த சரண்யா (38), மற்றும் தெய் வானை என்பதும், அவர்களுக்கு உடந்தையாக பாஜக மகளிரணியைச் சேர்ந்த மதுரை முடக்குச் சாலை நேதாஜி நகரைச் சேர்ந்த தனலட்சுமி (48) இருந்ததும் தெரியவந்தது. தலைமறைவான அவர்களை தனிப்படையினர் தொடர்ந்து தேடினர். அவர்களின் செல்பேசி டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியில் கட்சிக்காரர் ஒருவரின் வீட்டில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரிந்து, தனிப்படையினர் நேற்று அங்கு விரைந்தனர். பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதன் பிறகு   சரண்யா உட்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட் டனர். இவர்கள் 3 பேருடன் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.


No comments:

Post a Comment