1937 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றது. அப்போது தந்தை பெரியார் வெளியிட்ட ஒரு பெட்டிச் செய்தி!
‘‘கட்சி ஜெயிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள்! தோல்வியை நன்மையாக்கிக் கொண்டு இரட்டை வெற்றி அடையப் போகிறோம்.
ஆனால், நீங்கள் (தமிழ் மக்கள்) ஒவ்வொருவரும் ஒரு ‘‘குடிஅரசு'', ‘‘விடுதலை'' வாங்கிப் படியுங்கள்!
‘‘குடிஅரசு'' வருட சந்தா 3 - 0 - 0
‘‘விடுதலை' வருட சந்தா 1 - 0 - 0
மேற்படி இரண்டும் சேர்த்து வரவழைப்பவர்க்கு 3 - 8 - 0.
‘‘விடுதலை'' வாரம் இருமுறைக்கு வருடம் 1-க்கு 3 - 10 - 0
இப்பத்திரிகைகளைப் படித்தால்தான் அரசியல் உலகிலும், சமுதாய உலகிலும் என்ன நடக்கிறது என்கின்ற உண்மையை உணர முடியும். பார்ப்பனப் பத்திரிகைகள் வேண்டுமென்றே செய்யும் பொய்யான விஷமப் பிரச்சாரத்தின் யோக்கியதையை அறியக்கூடும்.''
(‘‘விடுதலை'', 17.3.1937, பக்கம் 8)
1937 இல் தந்தை பெரியார் சொன்னார் - 2022 இலாவது இதனைச் செய்யவேண்டாமா?
No comments:
Post a Comment