இந்தியாவில் 17,135 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

இந்தியாவில் 17,135 பேருக்கு கரோனா பாதிப்பு

புதுடில்லி. ஆக.4 இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 17,135 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி மேலும் 47 பேர் பலியாகி உள்ளனர். ஒன்றிய சுகாதார அமைச்சகம்   கடந்த 24 மணி நேரத்திற்கான கரோனா பாதிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் நேற்று  (3.8.2022) ஒரே நாளில் புதிதாக மேலும்  17,135 பேர் பாதித்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம்,  மொத்த பாதிப்பு எண் ணிக்கை 4,40,67,144 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 47 பேர் இறந் துள்ளனர். இதன் மூலம்,   நாட்டின் மொத்த உயிரிழந்தோர் மொத்த  எண் ணிக்கை 5,26,477 ஆக உயர்ந்தது.

 

No comments:

Post a Comment