தமிழ்நாட்டில் புதிதாக 1,302 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 1,302 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை,ஆக.3- தமிழ்நாட்டில் நேற்று (2.8.2022) ஆண்கள் 783, பெண்கள் 519 என மொத்தம் 1,302 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 298 பேர் தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 46,907 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 97,079 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றுமட்டும் 1,734 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 11,796 பேர் சிகிச் சையில் உள்ளனர். நேற்றுநோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 1,359 ஆகவும், சென்னையில் 309 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது.

முன்னதாக, நேற்றுகாலை நேர நிலவரப் படி இந்தியாவில் புதிதாக 13,734 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ள தாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. 1,39,792 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



No comments:

Post a Comment