தஞ்சை, ஆக.8 தமிழ்நாட்டில் மாவட்டத் துக்கு ஒரு இடத்தில் ஆக.12 முதல் மாலை நேர உழவர் சந்தைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக் கிறார்
தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல் பட்டு வருகின்றன. தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையின்போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, ஆக.12-ம் தேதி முதல் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை வீதம் 37 இடங் களில் (சென்னை தவிர) தின மும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள் ளன. இங்கு உழவர் உற்பத்தியா ளர் நிறுவனங்கள் மூலம் சிறு தானியங்கள், பயறு வகைகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட் கள் விற்பனை செய்யப் படும். ஆக.12-ம் தேதி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இவற்றை திறந்து வைக்கிறார்.
No comments:
Post a Comment