ஆக.12 முதல் மாலை நேர உழவர் சந்தைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

ஆக.12 முதல் மாலை நேர உழவர் சந்தைகள்

தஞ்சை, ஆக.8 தமிழ்நாட்டில் மாவட்டத் துக்கு ஒரு இடத்தில் ஆக.12 முதல் மாலை நேர உழவர் சந்தைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக் கிறார்

 தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல் பட்டு வருகின்றன. தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையின்போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, ஆக.12-ம் தேதி முதல் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை வீதம் 37 இடங் களில் (சென்னை தவிர) தின மும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள் ளன. இங்கு உழவர் உற்பத்தியா ளர் நிறுவனங்கள் மூலம் சிறு தானியங்கள், பயறு வகைகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட் கள் விற்பனை செய்யப் படும். ஆக.12-ம் தேதி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி  மூலம் இவற்றை திறந்து வைக்கிறார்.

 

No comments:

Post a Comment