தமிழ்நாட்டில் புதிதாக 1,141 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 1,141 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை,ஆக.6- தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை நேற்று (5.8.2022) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்கள் 686, பெண்கள் 455 என மொத்தம் 1,141 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 247 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 50,547 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 01,916 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,530 பேர் குணமடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் 10,598 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் நேற்று முந்தைய நாள் கரோனா தொற்று பாதிப்பு 1,211 ஆகவும், சென்னையில் 268 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது. முன்னதாக, நேற்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 20,551 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 1,35,364 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21,595 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 205.59 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment