சென்னை, ஆக.7 தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 650 ஆண்கள், 444 பெண்கள் என மொத்தம் 1,092 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 239 பேர், கோவையில் 127 பேர், செங்கல்பட்டில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளாகி 10 ஆயிரத்து 261 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 652 பேரும், கோவையில் 957 பேரும், செங்கல்பட்டில் 873 பேரும், சிகிச்சையில் இருக்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment