அரியலூர் மாவட்ட கழக செயலாளர் சிந்தனைச் செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் ஆகியோரின் தாயார் தனலட்சுமி அம்மையார் (வயது 74) இன்று (30.7.2022) காலை எட்டு மணி அளவில் மறைவுற்றார். ஆண்டிமடத்தில் இன்று மாலை இறுதி நிகழ்வுகள் - இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தோழர் சிந்தனைச் செல்வனுக்கு தமது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மாவட்ட தலைவர் நீலமேகம், மண்டல செயலாளர் மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்டத் துணைத் தலைவர் திலீபன், மீன்சுருட்டி தலைவர், அசோகன், சேக்கிழார், ஒன்றிய தலைவர் தியாக முருகன், செந்தில், பாவேந்தர் விரும்பி, மாவட்ட துணைச் செயலாளர் சங்கர், துரை பிரபாகரன், கருணாநிதி, கோ.பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று மறைந்த அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர் கழகத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment