ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் கழக இளைஞரணி மாநில மாநாடு விளக்க துண்டறிக்கை விநியோகம் மற்றும் கடைவீதி வசூல் 25.07.2022 அன்று மாலை தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலா ளர் கரந்தை அ.டேவிட், மாநகர அமைப்பாளர் செ.தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை தஞ்சை மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங் தொடங்கிவைத்தார். மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், தஞ்சை பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் புலவர் சாமி.கலைசெல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர். வணிக பெருமக்கள் அன்புடன் வரவேற்று மாநாடு சிறக்க நன்கொடை வழங்கி பேராதரவு தந்தனர்.
ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் கழக இளைஞரணி மாநில மாநாடு விளக்க துண்டறிக்கை விநியோகம் மற்றும் கடைவீதி வசூல் 20.07.2022 அன்று மாலை தஞ்சை பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகர இளைஞரணி துணை தலைவர் அ.பெரியார்செல்வம் தலைமையில், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திரா பதி, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், நகரத் தலைவர் பா.நரேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் சி.அமர்சிங் தொடங்கிவைத்தார். மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டியன், மாவட்ட மாணவர் கழகத் துணை செயலாளர் ஏ.விடுதலையரசி, ஒன்றிய ப.க. அமைப்பாளர் காளிமேடு அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர். வணிக பெருமக்கள் அன்புடன் வரவேற்று மாநாடு சிறக்க நன்கொடை வழங்கி பேராதரவு தந்தனர்.
No comments:
Post a Comment