ஆய்வகத்தில் சுரந்த தாய்ப்பால்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

ஆய்வகத்தில் சுரந்த தாய்ப்பால்!

செல் உயிரியலாளரான டாக்டர் லெய்லா ஸ்ட்ரிக்லேண்ட்டுக்கு, 11 ஆண்டுகளுக்கு முன் குட்டிப் பாப்பா பிறந்தது. ஆனால், அவருக்கு போதிய பால் சுரக்காததால், செயற்கை 'பார்முலா'க்களைத்தான் அவரால் பாப்பாவுக்குப் புகட்ட முடிந்தது. அப்போதிலிருந்து, தாயின் மார்பகத்தில் பால் சுரக்கச் செய்யும் செல்களை ஆய்வகத்தில் வளர்க்கும் ஆராய்ச்சியைத் துவங்கினார் லெய்லா.அதன் பலனாக தற்போது, தாயின் மார்பகத்தில் சுரக்கும் தாய்ப்பால் போலவே, ஆய்வகத்தில் வளர்த்த மார்பக செல்களிலிருந்து தாய்ப்பாலில் உள்ள முக்கியமான புரதங்கள் மற்றும் சர்க்கரைகளை உற்பத்தி செய்யும் முறையை லெய்லா உருவாக்கியுள்ளார்.'பயோமில்க்' என்ற நிறுவனத்தையும் லெய்லா துவங்கியுள்ளார். இதில் பில் கேட்ஸ் 35 லட்சம் டாலர்களை முதலீடு செய்துள்ளாராம்.


No comments:

Post a Comment