பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு

சிறுகதைப் போட்டி- 2022

விதிமுறைகள்:

* சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.

* எழுத்தாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். 

மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது.

* சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து 

சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 31, 2022.

* வெற்றி பெற்ற சிறுகதைகளுக்குத் தந்தை பெரியார்  

பிறந்தநாளான 2022 செப்டம்பர் 17 அன்று பரிசு 

வழங்கப்படும்.

* யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் 

கதைகளை அனுப்பி வைக்கவேண்டும்.

* எழுத்தாளரின் உண்மைப் பெயர், முழு முகவரி, 

தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் 

குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். புனைப் பெயர்  பயன் 

படுத்துவோரின் உண்மைப் பெயர் வெளியிடப்படாது.

* கதையைத் தட்டச்சு செய்து அஞ்சல் மூலமும் 

அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் 

திருப்பி அனுப்ப இயலாது. எனவே தேவையான 

பிரதிகளை எடுத்து வைத்துக்கொண்டு கதைகளை 

அனுப்பவும்.

* கையெழுத்துப் பிரதிகள் ஏற்கப்படமாட்டாது. தெளிவாக 

தட்டச்சு செய்து மட்டுமே கதைகளை அனுப்பவேண்டும்.

* தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் தொகுக்கப்பட்டு தனியே 

புத்தகமாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தால் அச்சு 

வடிவிலும், கிண்டிலிலும் வெளியிடப்படும்.

* கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களுக்கே! தொகுப்புப் 

புத்தகத்தின் காப்புரிமை பகுத்தறிவு எழுத்தாளர் 

மன்றத்தைச் சேர்ந்தது.

நிபந்தனைகள்:

*  கதைகள் பகுத்தறிவு, சமூகநீதி, ஜாதி-மத ஒழிப்பு, 

பெண்ணுரிமை, முற்போக்குக் கருத்துடையனவாக 

இருக்கவேண்டும்.

* சிறுகதைகள் 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் 

இருக்கவேண்டும். 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் 

இருக்கவேண்டும்.

* புதிதாக எழுதப்பட்ட கதைகள் எனில், இதுவரை எங்கும்

(இணையதளம், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட) 

பிரசுரிக்கப்படவில்லை என்பதற்கு ஆசிரியர் 

உறுதிமொழி அளிக்கவேண்டும்.

* 2021, 2022-ஆம் ஆண்டில் ஏதேனும் இதழில் 

வெளியான சிறுகதை என்றால், எந்த இதழில், எப்போது 

வெளியானது என்று குறிப்பிட்டு சிறுகதை வெளிவந்த 

இதழின் நகலை இணைத்து அனுப்ப வேண்டும்.

* கதைகள் தொடர்பாக நடுவர்களுடனோ, போட்டியை 

நடத்துபவர்களுடனோ எவ்விதத்திலும் கடிதப் 

போக்குவரத்தோ, தொலைபேசித் தொடர்புகளோ 

மேற்கொள்ளக்கூடாது.

* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பரிசுகள்

முதல் பரிசு: 5000

இரண்டாம் பரிசு: 3000

மூன்றாம் பரிசு: 2000

பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிற கதைகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.500 பரிசளிக்கப்படும்.

“எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி-2022” என்று தலைப்பிட்டு கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: 

rationalistwriters@gmail.com

அஞ்சல் முகவரி:

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,

பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, 

வேப்பேரி, சென்னை-7

No comments:

Post a Comment