அரியலூர் மாநில இளைஞரணி மாநாடு நன்கொடை மற்றும் விடுதலை சந்தா சேகரிப்பு பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

அரியலூர் மாநில இளைஞரணி மாநாடு நன்கொடை மற்றும் விடுதலை சந்தா சேகரிப்பு பணி

ஜூலை 30 அரியலூர் மாநில இளைஞரணி மாநாடு நன்கொடை மற்றும் விடுதலை சந்தா சேகரிப்பு பணியில் திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மண்டல தலைவர் மு.நாகராஜன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா. கமல் குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.  வத்தலக் குண்டு சக்திவேல் இளைஞரணி மாநாட்டு நன்கொடை வழங்கி, விடுதலை சந்தா சேர்த்து தருவதாக உறுதிகூறினார். எஸ்.முருகன் இளைஞரணி மாநாட்டு நன்கொடை வழங் கினார். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் நாகராஜன், வத்தலக்குண்டு முத்து, மானமிகு. சுந்தர், சின்னாளப்பட்டி நாகேந்திரன் ஆகியோர் விடுதலை சந்தா மற்றும் நன்கொடை ஆகியவற்றை சேர்த்து தருவதாக உறுதிகூறி புத்தகங்களை பெற்றுக்கொண்டனர். மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. சக்தி சரவணனுடன் மாநாட்டு வேலைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.


No comments:

Post a Comment