கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக திராவிடர்கழக கொள்கை விளக்க துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் தோழர்கள். நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், கழக மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், தொழிலாளரணி அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா. கோகுல், தோழர்கள் குமரிச் செல்வன், ச.ச.மணிமேகலை, சியாமளா, உட்பட பலரும் கலந்து கொண்டனர். தந்தை பெரியாருடைய கருத்துக்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துக்கள் அடங்கிய துண்டறிக் கைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment