காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்க தடை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது குறித்து விவாதிக்க தடை!

புதுதில்லி, ஜூலை 21 - ஜூலை 22-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை விவ காரம் குறித்து விவாதிக்க தடை விதித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் திட்டமிடப் பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தின் 16-ஆவது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கருநாடக அரசு தரப்பில் ஆணை யத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தரி டம் முறையிடப்பட்டது. இதற்கு ஆணை யமும் அனுமதி அளித்திருந்தது.  ஆனால், இந்த அனுமதி உச்சநீதி மன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது எனக் கூறி தமிழ்நாடு அரசு,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதி மன்ற நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலை மையிலான அமர்வு முன்பு நேற்று (20.7.2022) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த  வழக்குரைஞர் முகுல் ரோத்கி, “கடந்த  2018-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை உச்சநீதிமன்றத் தின் உத்தர வின்படி கருநாடக அரசு முறையாக நீர் பங்கீட்டை மேற் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் புதிய அணை கட்டினால் கீழ் பாசன வசதி பெறக் கூடிய மாநிலங்களுக்கு முறை யாக நீர் பங்கீடு கிடைக்காது. மேலும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத் தில் மேகதாது தொடர்பாக எந்த வொரு விவாதமும் நடத்த அனுமதிக்கக்  கூடாது. காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் இதற்கான அமைப்பு கிடையாது. எனவே, ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணை குறித்த விவாதத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கருநாடக அரசின் மூத்த வழக்குரைஞர் சியாம் திவான், “கருநாடக அரசு முறையாக நீர் பங்கீட்டை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கருநாடக அரசின் எல்லை க்கு உட்பட்ட பகுதியில் அணை கட்டப்படுவதால், கீழ் பாசன வசதி பெறக் கூடிய மாநி லங்களுக்கு நீர் பிரச்சினை இருக்காது. எனவே தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு தேவையற்றது” என வாதிட்டார். இருதரப்பு வாதங் களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் அறிய வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்தி  வைப்பதாக கூறினர்.

அப்போது, கருநாடக அரசுத் தரப்பில் “வழக்கை ஒத்திவைக்கக் கூடாது; அதேபோல காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்தவும், அதில் மேகதாது குறித்து விவாதம் செய்யவும் அனுமதி வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. அப்போது, “இவ்விவகாரத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் காத்திருக்கும் நிலையில் மேலும் ஒரு வாரம் காத்திருந் தால் என்னவாகப் போகிறது?” என  கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசார ணையை வரும் ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும், “ஜூலை 22 அன்று திட்டமிட்டபடி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடத்தலாம்" என்றும், அதேநேரம் “அந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது” எனவும் தடை விதித்தனர்.

No comments:

Post a Comment