நாமக்கல், ஜூலை 18- நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் 17.07.2022 ஞாயிறு நண்பகல் 12 மணியளவில் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களது தலைமையில், அமைப் புச் செயலாளர் ஈரோடு த.சண் முகம், நாமக்கல் மாவட்ட தலைவர் அ.குமார், மாவட்ட செயலாளர் வை.பெரியசாமி, மாவட்ட ப.க. தலைவர் வழக்குரைஞர் இளங்கோ ஆகியோரது முன்னிலையில் நடை பெற்றது. சிறப்பு அழைப்பாளர் களாக பொதுக்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன், பேராசிரி யர் ப.காளிமுத்து, சேலம் மண்டல தலைவர் கவிஞர் சி.சுப்பிரமணியம், மேட்டூர் மாவட்ட தலைவர் கிருட் டிணமூர்த்தி, பொத்தனூர் சிவக் குமாரன், ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
கூட்டத்தில் பள்ளிபாளையம் பொன்னுசாமி, சீனிவாசன், பொத்தனூர் ப.க.வீர. முருகன், ராச சேகரன், ச.செங்குட்டுவன், செ.கலைமணி, அன்பு, அறிவாயுதம், செல்வகுமார், ரவி, சு.சேகர், குமார பாளையம் நகர தலைவர் சு.சரவ ணன், செயலாளர் காமராஜ் ஆகி யோர் கலந்துகொண்டனர்.
தீர்மானம் 1
கடந்த 3.7.2022 அன்று நடை பெற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.ச அவர்களது நூற் றாண்டு விழாவை சிறப்பாக நடத் திக்கொடுத்த தலைமைக் கழகத் திற்கும், குறிப்பாகத் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களுக்கும், பணி யாற்றிய அத்துணை தோழர்களுக் கும், விழாக் குழுவினருக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அத்துணை பேருக்கும் கலந்துரையாடல் கூட் டம் நன்றி தெரிவித்துக்கொண்டது..
தீர்மானம் 2.
நாமக்கல் மாவட்டத்திற்கு ஒதுக் கப்பட்ட விடுதலை" சந்தாக்களைத் திரட்டித் தருவது எனவும் முடி வெடுக்கப்பட்டது. முதல் தவணை யாக 20 சந்தாக்களை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் தலைவர் பொத்தனூர் க.ச. வழங்கினார்கள்.
தீர்மானம் 3.
அரியலூரில் நடைபெறும் இளை ஞரணி மாநாட்டிற்கு நாமக்கல் மாவட்டம் சார்பில் பெருந்திரளாக தனி வாகனத்தில் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. இறுதியாக பெரியார் படிப்பக பொறுப்பாளர் காமராஜ் நன்றி கூற கலந்துரை யாடல் இனிதே நிறைவுற்றது.
அனைவருக்கும் சுவைமிகு நண் பகல் உணவு அய்யா க.ச.வின் குடும் பத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment