நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்: ஜனநாயக முறைக்கு உகந்ததல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்: ஜனநாயக முறைக்கு உகந்ததல்ல!

நாடாளுமன்ற உறுப்பினர்களின்  இடைநீக்கம் ஜனநாயக முறைக்கு உகந்ததல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது கண்டன அறிக்கை வருமாறு: 

நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகை (பிரியாம்பிள்) இறையாண்மையுடன் கூடிய சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்றே கூறப்பட்டுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்வளையை நெரிப்பதுபோல, அவர்களது பேச்சுரிமை, கருத்துரி மையை பறிப்பது எவ்வகையிலும் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.

இப்போதுள்ள இரண்டாம் முறை பிரதமர் மோடி ஆட்சி, அதிகப் பெரும்பான்மை பெற்றதன் (ரோடு ரோலர் மெஜாரிட்டி என்பார்கள்)  காரணமாக ஜனநாயக உரிமைகள் நாளும் பறிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்டம் அளித்த உறுதிமொழிகள் பறிபோகும் பரிதாபம் ஏற்பட்டு வருகின்றது.

முடிவினை 

மறுபரிசீலனை செய்க!

எடுத்துக்காட்டாக மூன்று ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் துணை சபாநாயகர் பதவி (டெபுடி ஸ்பீக்கர்) இன்னமும் காலியாகவே இருக்கிறது; மரபு முறைப்படி எதிர்க்கட்சியினருக்கு அளிக்கப்பட்டு வரும் முறைக்கும் விடை கொடுக்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று (26.7.2022) மாநிலங்களவை உறுப்பினர்கள் பலரும் இத்தொடர் நிகழ்வில் ஒரு வாரம் கலந்துகொள்ளக்கூடாது என்று இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்பதால், அம்முடிவினை மறுபரிசீலனை செய்து, ஜனநாயகம் நிலைநாட்டி, சர்வாதிகாரம் கொடியேற்றப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டியது அனைத்து மக்களின் கடமையாகும்.!

கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

27.7.2022


No comments:

Post a Comment