கழிவுநீரை சுத்திகரிக்காத ஆலைகளுக்கு அபராதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

கழிவுநீரை சுத்திகரிக்காத ஆலைகளுக்கு அபராதம்

சேலம், ஜூலை.4  கழிவுநீரை சுத்தி கரிக்காமல் ஆற்றில் விடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கூறினார்.   

சேலம் அருகே உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுநீர் கலந்து, நுரையுடன் செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  திருமணிமுத்தாற்று பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருமணிமுத்தாறு சேலம் மாநகராட்சி பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சிறிய சாயப்பட்டறை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீராலும் திருமணிமுத்தாறில் கலப்பதால் மாசு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், ஆற்றில் ஆக்சி ஜன் குறைவால் மீன்கள் கூட வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது

சேலம் மாநகராட்சியில் 4 இடங் களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவற்றில் 2 மட்டும் செயல் பட்டு வருகிறது. கூடுதலாக 3 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுவீச்சில் செயல்படு வதன் மூலம் திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்.

 நிறுவனங்கள் மீது நடவடிக்கை 

திருமணி முத்தாற்றை மீட்டெடுக்க இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். மாஸ்டர் பிளான் அடிப்படையில் மாநகராட்சி கழிவுநீர் கலக்காமல் 100 ஏக்கரில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, ஆற்றின் நடுவில் சுத்தி கரிப்பு நிலையம் அமைப்பது என திட்டமிட்டுள்ளோம். சேலம் மாநக ராட்சியில் 90 சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகளும், 25 ஜவ்வரிசி தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. ஆனால் வாரிய விதிமுறைகளை மீறி கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளி யேற்றி வந்த 45 சாயப்பட்டறைகள், 5 ஜவ்வரிசி தொழிற்சாலைகளும் மூடப் பட்டு அதன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் மாசு கலப்பது தாய்ப்பாலில் விஷம் கலப்பதற்கு சமம் ஆகும். எனவே, கழிவுநீரை சுத்திகரிக்காமல் சட்ட விரோதமாக ஆற்றில் கலந்து விடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் 2019ஆ-ம் ஆண்டில் இருந்து 14 வகை பிளாஸ்டிக் பொருள்  தடை செய்யப்பட்டுள்ளன. 1,177 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 174 பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டு ரூ.105 கோடி அபராதம் வசூலிக்கப்பட் டுள்ளது. தற்போது ஒன்றிய அரசு பிளாஸ்டிக் தடை விதித்திருப்பது வரவேற்புக்குரியது. இதன்மூலம் வெளி மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் வருவது முழுமையாக தடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கூறினார். 

No comments:

Post a Comment