சென்னை, ஜூலை.21 தமிழ்நாடு உள்துறைச்செயலர் பிறப்பித்த உத்தர வில் கூறியிருப்பதாவது:
“உளவுத்துறை அய்ஜி ஆசியம்மாள் அமலாக்கப்பிரிவு அய்ஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே, உளவுத்துறை அய்ஜியாக செந்தில் வேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஷ்வரன் நியமிக்கப் பட்டுள்ளார்.
சீருடைப் பணியாளர் தேர்வு வாரி யத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
மேலும் சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான் நியமனம் செய்யப் பட்டுள்ளார். திருவல்லிக்கேணி காவல் துறை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சமய் சிங் மீனா, கிரண் ஸ்ருதி, தீபக் ஷிவச், ஹர்ஷ் சிங் மற்றும் சாய் ப்ரணீத் ஆகியோர் காவல் கண்காணிப்பா ளர்களாக .யாக பதவி உயர்வு பெறுள்ளனர்” எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment