புதுடில்லி, ஜூலை 16 நாடாளுமன்ற வளாகத்தில் மறியல், போராட்டம், பட்டினிப் போர் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மாநிலங்கள வையின் புதிய சுற்றறிக்கை சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது.
18.7.2022 அன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. கடந்த காலங் களைப் போல் இந்த தொடரிலும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்து வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. நாடாளுமன்ற வளாகத்துக் குள் உள்ள காந்தியார் சிலை அருகே இரு அவைகளின் உறுப்பினர்களும் போராட்டங்களை நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், மாநிலங்களவை யின் செய்தி மடலில் நேற்று (15.7.2022) ஒருபுதிய சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. மாநிலங் களவை செயலாளர் பி.சி.மோடி வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கை யில், ‘‘நாடாளுமன்ற வளாகத்தில் மறியல், போராட்டம், பட்டினிப் போர் நடத்த அனுமதி கிடையாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமலாக்குவதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம் புவதாகவும் அதில் குறிப்பிடப்பட் டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மாநிலங்களவை யின் காங்கிரஸ் கட்சி கொறடா ஜெய்ராம் ரமேஷ் சுட்டுரைப் பதிவில், ‘‘விஸ்வகுருவின் புதிய தீர்வு, மறியலுக்கு தடை’’ என்று குறிப்பிட் டுள்ளார். இத்துடன் ஆங்கிலத்தில் ‘ஞி(லீ)ணீக்ஷீஸீணீ’ எனும் வார்த்தைக்கு ‘மறியல்’, ‘அச்சம்’ என இரட்டை அர்த்தம் கொள்ளும் வகையில், இதற்காக அச்சப்பட மாட்டோம் என்ற பொருளில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, ஜெய்ராம் ரமேஷுக்கு மாநிலங்களவை செயலகம் அளித் துள்ள விளக்கத்தில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இதுபோன்ற சுற்றறிக் கைகள் வெளியிடுவது வழக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
இத்துடன் ஏற்கெனவே வெளி யான சில சுற்றறிக்கைகளின் நகல் களும் அதில் இணைக்கப்பட்டுள் ளன. இதில், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட் டணி ஆட்சியின் போது 2-_12_2013 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக் கையும் இடம் பெற்றுள்ளது.
இதற்கு முன் நேற்றுமுன்தினம் (14_7_2022) தடை செய்யப்பட்ட சொற்களின் தொகுப்பு வெளியாகி சர்ச்சை கிளம்பியது. இதன் மீது எதிர்கட்சிகள் அளித்த புகாருக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா அளித்த பதிலில், ‘‘எந்த சொற்களும் புதிதாக தடை செய்யப்படவில்லை. இதற்கு முன் நாடாளுமன்றக் கூட் டங்களில் அவைக் குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்டவைதான் பட்டி யலாக வெளியிடப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment