மாநில கல்விக் கொள்கை : மக்களிடம் கருத்து கேட்க முடிவு ஆய்வுக் குழுத் தலைவர் நீதிபதி முருகேசன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

மாநில கல்விக் கொள்கை : மக்களிடம் கருத்து கேட்க முடிவு ஆய்வுக் குழுத் தலைவர் நீதிபதி முருகேசன் தகவல்

சென்னை, ஜூலை 15- மாநில கல்விக் கொள்கை குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாக டில்லி உயர் நீதி மன்ற மேனாள் நீதிபதி முருகேசன் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க  டில்லி உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தற்போது இந்த கொள்கை குறித்து பொதுமக்களி டம் கருத்துகளை கேட்க உள்ளனர். தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு பாதகமான அம்சங்கள் இருப்பதாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. மேலும் திமுகவின் தேர்தல்  அறிக்கையில் ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டிற்குத் தனியாகக் கல்விக்  கொள்கை உருவாக்கப் படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு புதிய கல்விக்  கொள்கை வடிவமைக்க மாநில அளவிலான குழுவை  அமைத்து உத்தரவிட்டார்.

அந்தக் குழுவின் தலைவராக மேனாள் டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் நியமிக் கப்பட்டார். மேலும், உறுப்பினர் களாக சவீதா பல் கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஜவகர் நேசன், தேசிய கணித அறிவியல் நிறுவ னத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானு ஜம், மாநில திட்டக்  குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில், ராமசீனி வாசன், யூனிசெப் மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்தினம் உள்ளிட் டவர்கள் நியமிக்கப்பட்டனர். 

புதிய கல்விக் கொள்கை வடிவ மைப்பதற்குத் தமிழ்நாடு அரசு ஓராண்டு காலக்கெடு வழங்கியது. இந்நிலையில், டில்லி உயர்  நீதிமன்ற மேனாள் நீதிபதியும், தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு குழு தலைவருமான முருகேசன் தலைமையில் சென்னை அண்ணா  பல்கலைக்கழக வளா கத்தில் அமைக்கப்பட்டுள்ள அலு வலகத்தில்  மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பொது மக்களிடம் கருத்துக் கேட்பது மற்றும் கல்விக்  கொள்கையை வடிவமைப்பதில் உள்ள சவால்கள் குறித்து குழுவினர் தீவிரமாக ஆலோசனை செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய நீதிபதி முருகேசன், புதிய கல்விக் கொள்கை வடிவ மைப்பு குறித்து எட்டு மண்டலங் களாகப் பிரித்து தமிழ்நாட்டில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத் துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இது குறித்து அறிவிப்பு இரு நாட் களில் முறைப்படி அறிவிக்கப்படும். பொதுமக்கள் மின்னஞ்சல் மூலமும் நேரடியாகவும் தங்கள் கருத்துக் களைச் சமர்ப்பிப்பதற்குத் தேவை யான மின்னஞ்சல் முகவரியும், நேரடி முகவரியும் அறிவிக்க  உள்ளோம். கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்படும். மேலும் நேரடியாகப் பொது மக்களிடம் நாங்களும் கருத்துக்களைப் பெற உள்ளோம். புதிய கல்விக் கொள்கை வடிவ மைப்பது குறித்து கல்வியா ளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட வர்கள் கருத்துக்களைத் தெரிவிக்க லாம். மேலும் பள்ளிக்கல்வித் துறை. உயர்கல்வித் துறை,  சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள் ளிட்ட  கல்வித்துறை உடன் தொடர் புடைய அனைத்து துறைகளின் அதிகாரிகளையும் அழைத்து வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் கருத் துக் கேட்புக் கூட்டம் நடத்த உள்ளோம். 

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment